இந்தியா
பெங்களூருவில் டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை வரை 144 தடை சட்டம் அமல்..!
பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பெங்களூருவில் டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை வரை 144 தடை சட்டம் அமலில் இருக்கும் என்று பெங்களூரு காவல் துறை ஆணையர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் புத்தாண்டு கோலாகலமாக்கக் கொண்டாடப்படும் எம்.ஜி.ரோடு, சர்ச் சாலை, பிரிகேட் ரோ, கோரமங்களா, இந்திரா நகர் ஆகிய இடங்களில் கூட்டமாக நபர்கள் யாரும் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அங்கும் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் ஏதும் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
https://seithichurul.com/news/india/karnataka-govt-bans-new-year-celebrations-from-dec-30-to-jan-2-amid-covid-19/30214/