Connect with us

தமிழ்நாடு

வைகோவை அனுமதிக்கக் கூடாது: சசிகலா புஷ்பா வெங்கையா நாயுடுவுக்கு பரபரப்பு கடிதம்!

Published

on

தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியானது.

இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மூலம் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. வைகோவுக்கு எதிராக துணைக்குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வைகோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நான் குற்றம்சாட்டுகிறேன் நூல் வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக வைகோ மீது ஐபிசி 124(ஏ) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை என்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யாது. ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால்தான் ஒருவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யமுடியும். இருந்தாலும் ஜனநாயகத்தின் கோயில் போன்ற இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை அனுமதிக்கக் கூடாது.

வைகோ தொடர்ந்து நாட்டிற்கு எதிரான கருத்துக்களைக் கூறிவருகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக பலமுறை முழக்கங்கள் எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். இதன்மூலம் தமிழக மக்களை தவறாக வழிநடத்துகிறார் வைகோ. மேலும், நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் பேசிய வைகோ, என்ன தண்டனை வழங்கினாலும் எதிர்காலத்திலும் அதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்வேன் என்று நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளேன். இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கும் பிரதமருக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவிப்போருக்கும் தக்க பாடம் புகட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?