Connect with us

தமிழ்நாடு

பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜர்: மீண்டும் சிறை தண்டனையா?

Published

on

பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவினர் சசிகலா இளவரசி மீது குற்றப் பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சசிகலா இளவரசி உட்பட 7 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இந்த உத்தரவை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சசிகலா மற்றும் இளவரசி நேற்று கார் மூலம் பெங்களூர் சென்றதாக கூறப்படுகிறது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்றும் வழக்கின் விசாரணை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றும் தெரிகிறது .

இந்த வழக்கின் முடிவில் சசிகலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மீண்டும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?