இந்தியா
பிரதமர் ஒரு கோழை, திமிர் பிடித்தவர்… பிரியங்கா காந்தி ஆவேசம்!

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை கோழை எனவும் திமிர் பிடித்தவர் எனவும் விமர்சித்துள்ளார்.

#image_title
2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர் நேற்று. அதில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா காந்தி, இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை, எங்கே என் மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புங்கள். அதிகாரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கக் கூடிய கோழை பிரதமர். திமிர் பிடித்தவர். திமிர் பிடித்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள் என மிக காட்டமாக விமர்சித்தார்.