Connect with us

சினிமா செய்திகள்

அன்றே சொன்னார் ராஜ்கிரண்.. பணம் நகையுடன் காதலனுடன் சென்ற வளர்ப்பு மகளிடம் விசாரணை!

Published

on

பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை நடிகர் முனிஷ்ராஜா என்பவர் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனது மகளை பணம் மற்றும் நகைக்காகவே முனிஷ்ராஜா திருமணம் செய்து கொண்டதாக ராஜ்கிரண் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் ராஜ்கிரண் – பத்மஜோதி தம்பதியினர் பிரியா என்பவரை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர் என்பதும் அவர் சமீபத்தில் முகநூல் மூலம் நடிகர் முனிஷ்ராஜாவை காதலித்து, நடிகர் ராஜ்கிரண் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த ராஜ்கிரண் தனது வளர்ப்பு மகளுக்கும் தனக்கும் இனி எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் தன்னிடம் இருந்து எடுத்துச் சென்ற நகை மற்றும் பணத்துக்காகவும், தனது நற்பெயரை கெடுப்பதற்காகவும் தான் நடிகர் முனிஷ்ராஜா தனது மகளை காதலிப்பது போல நடித்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முனிஷ்ராஜா மற்றும் பிரியா ஆகியோர்களை காவல்துறையினர் விசாரித்தனர். தனது வீட்டிலிருந்து 17 சவரன் நகை மற்றும் குடும்பத்தாலி ஆகியவற்றை பிரியா எடுத்துச் சென்று விட்டதாக ராஜ்கிரண் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் முனிஷ்ராஜா மற்றும் அவரது மனைவி ப்ரியாவிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியா, ‘தனது குடும்ப நகையான 40 சவரன் நகைகளை ராஜ்கிரண் குடும்பத்தினர் தனக்கு கொடுக்க மறுப்பதாகவும் தனக்கு திருமண வயதை தாண்டிய போதிலும் திருமணம் செய்து வைக்காமல் தன்னை வீட்டில் ஒரு வேலைக்காரியாக நடத்தியதாகவும் தனக்கு சேர வேண்டிய நகைகளை காவல்துறையினர் தான் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?