Connect with us

தமிழ்நாடு

எந்த விபரமும் எனக்கு தெரியாது: ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் பதில்!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக எந்த விவரமும் தனக்கு தெரியாது என்றும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது கூட தனக்கு தெரியாது என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு சமீபத்தில் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதிஅ அடுத்து மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை இளவரசியிடம் விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம், தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடமும் விசாரணை செய்துள்ளது.

இந்த விசாரணையின்போது ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது என்ற விபரம் தனக்கு தெரியாது என்றும், எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற விவரமும் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் 2016 ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் கூட தனக்கு தெரியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?