தமிழ்நாடு
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!
10ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இந்த பொதுத் தேர்வுகளை எழுத தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தவறிய தனித்தேர்வர்களுக்கு மட்டும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்கள் இந்த சிறப்பு வகுப்பில் சேர மார்ச் 9 முதல் 15 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கும் நாள், மையம் போன்ற விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அணுகவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.