வணிகம்
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாடு அரசு குழுவிற்கு கடிதம் – செப்டம்பர் 30க்குள் அறிக்கை அவசியம்

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு, தமிழ்நாடு தலைமைச் செயலகச் செயகம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளது.
அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
🔹 காலக்கெடு நீட்டிப்பு இல்லை
எந்த காரணத்தையும் காட்டி குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கக்கூடாது. அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு 30.09.2025க்குள் அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
🔹 தமிழ்நாட்டின் தனித்துவம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributory Pension Scheme) தமிழ்நாட்டில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் (PFRDA) ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை.
ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே பாதுகாப்பாக உள்ளது.
இதனால், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தேவையில்லை.
🔹 ஒன்றிய அரசின் திட்ட குறைகள்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18.5% வரை உயரும்.
அந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், நிலையான வருமானம் கிடைக்கும் என உத்தரவாதம் இல்லை.
ஊழியர்களின் சேமிப்புகள் பாதுகாப்பில் இல்லை; திரும்பப் பெறும் தொகைக்கு உறுதியும் இல்லை.
25–30 ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர்கள் தங்கள் பங்களிப்பு மற்றும் வட்டியில் இருந்து வெறும் சிறிய தொகை மட்டுமே பெறுவார்கள்.
🔹 தற்போதைய நிலவரம்
2025 மார்ச் 31 நிலவரப்படி, தமிழ்நாட்டின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 6,24,140 சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து ₹84,507.27 கோடி இருப்பில் உள்ளது.
🔹 குழுவின் பரிந்துரைகள்
இந்த நிதியை பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் (GPF) மாற்ற வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத்தில் உள்ள ஊழியர்களையும் 1978 ஓய்வூதிய விதிகளின் கீழ் கொண்டு வர வேண்டும்.
பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியில் மரணமடைந்தவர்களுக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது ஷரத்தின் அடிப்படையில் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
🔹 முக்கிய வலியுறுத்தல்
குழுவின் அறிக்கை அரசிடம் செப்டம்பர் 30, 2025க்குள் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால நீட்டிப்பும் வழங்கப்படாது என்று தமிழக அரசு உறுதி செய்துள்ளது.




















