Connect with us

இந்தியா

மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் ஆதங்கம்!

Published

on

இந்தியாவில் கொரனோ வைரஸ் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் மக்களைக் காப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பர்கலா பிரபாகர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதாரம் மேதையுமான பர்கலா பிரபாகர் அவர்கள் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மத்திய அரசை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றும், ஆனால் மத்திய அரசு அதனை மறந்து தனது பொறுப்புகளை துறந்து, பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிறைய குடும்பங்கள் வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டதாகவும் பலர் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பிரபாகர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நானும் எனது சொந்தங்களையும் நண்பர்களையும் இருந்திருக்கின்றேன் என்றும் அது மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மருத்துவமனையின் வாசலில் நீண்ட வரிசையில் மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேத குவியல்கள் போன்ற காட்சிகள் பதபதைக்க வைத்ததாகவும் அரசியல் தலைவர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் இதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என விழிப்புணர்வு ஊட்ட வேண்டி அனைவரும் லட்சங்களில் மக்களை கூட்டி தேர்தல் பிரச்சாரம் செய்ததும், இன்னொருபுறம் கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்களை கூட அனுமதித்ததும் மிகப் பெரிய தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?