Connect with us

தமிழ்நாடு

யூடியூபில் ஒரே ஒரு வீடியோ: ரூ.300 கோடி அபேஸ் செய்த கோவை நபர்!

Published

on

யூடியூபில் வீடியோ அப்லோட் செய்து ரூபாய் 300 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

கோவையை சேர்ந்த விமல் குமார் என்பவர் மிஸ்டர் மணி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் . இந்த சேனலில் லைவ்வில் பேசும் நிகழ்ச்சியை நடத்திய விமல் குமார் பாரக்ஸ் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் இதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு மாதம் 8 சதவீதம் ஊக்கத்தொகையாக வட்டி வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அவரது கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி பலர் முதலீடு செய்தனர். கோவையில் மட்டுமன்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் முதலீடு செய்ததை அடுத்து ரூபாய் 300 கோடி வரை விமல் குமார் திரட்டியதாகத் தெரிகிறது .

இந்த நிலையில் மாதம் மாதம் கொடுக்க வேண்டிய வட்டி சரியாக வராததை அடுத்து சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரது அலுவலகத்தில் சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து முதலீட்டாளர்கள் கோவை கமிஷனர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர். விமல் குமாரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர். யூடியூப் வீடியோ மூலம் 300 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய விமல் குமாரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?