Connect with us

செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி ரத்து… அதிர்ச்சியான மாடுபிடி வீரர்கள்….

Published

on

jallikattu

ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று. பல வருடங்களாக இந்த விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டம் மூலம் அரசு ஜல்லிக்கட்டை சட்டமாக்கியது.

ஆனால், கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த வருடமும் வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், கொரொனா வைரஸ் பரவலை காரணம் காட்டி பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி பகுதியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கு வருகிற திங்கள் கிழமை (17.01.2022) அன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்ட்டுள்ளது. கடந்த வருடமும் கொரொனாவால் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அப்பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?