Connect with us

செய்திகள்

சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்தது ஏன்? – கைதான மணிகண்டன் அளித்த வாக்குமூலம்

Published

on

police

சமீபத்தில் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடு திருடிய நபர்களை பிடிப்பதற்காக முயற்சி செய்த போது ரயில்வே கேட் பகுதி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 10 வயது சிறுவன் ஒருவனும் அடக்கம். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

police

இந்நிலையில், பூமிநாதனை வெட்டி கொலை செய்தது 17 வயதுடைய மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவர் வாக்குமூலமும் அளித்துள்ளார். மணிகண்டன் அப்பகுதியில் ஆடுகளை திருடி ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்டு சந்தையிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். ஆனால், இவர் இதுவரை போலீசாரிடம் பிடிபடவில்லை.

சம்பவத்தன்று பைக்கில் தன்னுடன் 10 மற்றும் 14 வயது என இரண்டு சிறுவர்களை அழைத்து சென்று ஆடு திருடிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது எஸ்.ஐ பூமிநாதனிடம் சிக்கியுள்ளார். அவர்களை மடக்கி பிடித்து ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு பூமிநாதனின் செல்போனில் இருந்து மணிகண்டனின் அம்மாவிடம் இதுபற்றி கூறி அறிவுரை செய்துள்ளார். மேலும், மற்ற சிறுவர்களின் பெற்றோரிடமும் அவர் பேசியுள்ளார்.

manikandan

அப்போது எங்கே கைது செய்து தன்னை சிறையில் அடைத்துவிடுவார்களோ என்கிற பயத்தில் மணிகண்டன் அங்கிருந்த கல்லை எடுத்து பூமிநாதனின் பின்னால் இருந்து அவரின் தலையில் தாக்கியுள்ளார். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த பின் தனது பைக்கில் வைத்திருந்த ஆட்டை வெட்டும் அரிவாளால் அவரின் தலை மற்றும் கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். அதன்பின் அவர்கள் மூவரும் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?