செய்திகள்
கிறிஸ்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா -சென்னையில் அதிர்ச்சி..
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கியது. குறிப்பாக சென்னையில் மிகவும் அதிக பாதிப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.ஏற்கனவே சென்னை குரேம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அங்கு 22 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.