Connect with us

தமிழ்நாடு

சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்: அமைச்சர் சேகர்பாபு

Published

on

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ’உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கும், தீட்சிதர்களுக்கும் எதிராக இந்து சமய அறநிலையத்துறையை எப்போதும் செயல்படாது என்றும் தீட்சிதர்கள் விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறை ஏற்கும் என்று நாங்கள் எப்போதுமே கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீட்சிதர்கள் பிரதமரை சந்திக்க சந்திப்பதாக இருந்தால் அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம் என்றும், அது ஒரு ஜனநாயக உரிமை என்றும் மற்றொரு கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?