தமிழ்நாடு
17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ’கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 41% ஆக அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டம் நடத்தி நோயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 12ஆம் தேதி மீண்டும் தடுப்பூசி மையம் நடத்தப்பட உள்ளதாகவும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 17 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக அமைச்சர் கூறியிருப்பதௌ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.