வணிகம்
ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை.. மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் நிலவரம்!
மார்ச் மாதம் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 1.24 லட்சம் கோடி ரூபாய் என்ற ஜிஎஸ்டி வசூலைப் பெற்றுள்ளது.
மத்திய ஜிஎஸ்டி 22,973 கோடி ரூபாய். மாநில ஜிஎஸ்டி 29, 329 கோடி ரூபாய். ஒருங்கிணைக்கப்பட்ட ஐஜிஎஸ்டி 62,842 கோடி ரூபாய்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தொடர்ந்து 6 மாதங்களாக வசூல் 1 லட்சம் கோடி ரூபாய் ஆகியுள்ளது.
செஸ் வரியாக 8,757 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. முன்னதாக 2021, பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 1.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.