வணிகம்
வளைகுடா நாடுகளில் உள்ள என்ஆர்ஐ-கள் இனி கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
நிதி சட்டம் 2021-ன் கீழ் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் கூடுதலாக வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டி இருந்தார்.
சவுதி, ஐக்கிய அமீரகம், ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக வேலைக்குப் பல இந்தியர்கள் செல்கின்றனர். இப்படி கூலி வேலைக்குச் செல்லும் என்ஆர்ஐகளுக்கு இந்தியாவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருமான வரி விலக்கு நிதி சட்டம் 2021-ன் கீழ் நீக்கப்பட்டுள்ளதாக டி.எம்.சி எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியிருந்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்ட நிர்மலா சீதாராமன், “வார்த்தைகளில் பின்வாங்கப்போவதில்லை, நிதிச்சட்டம் 2021-ன் கீழ் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் தொழிலாளர்களாகச் சென்று கடினமாக உழைத்து வேலை பார்க்கும் என்ஆர்ஐகளின் வருமானம் மீது கூடுதல் வரியை கொண்டு வரவில்லை.” என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் இது போல சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுவது, மக்களை தவறாக வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் உருவாக்குகிறது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார்,