Connect with us

உலகம்

ஒரு வேலையும் செய்யாமல் ரூ.1 கோடி சம்பளம்: வழக்கு தொடர்ந்த ஊழியர்!

Published

on

தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அயர்லாந்து நாட்டிலுள்ள ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராக மில்ஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது வேலை குறித்து கூறிய போது நான் தினமும் அலுவலகத்திற்கு சென்று கணினியை இயக்குவேன் என்றும், அதில் இமெயில் ஏதும் வந்திருக்கிறதா என்று சோதிப்பேன் என்றும் ஆனால் பெரும்பாலும் இமெயில் எதுவும் எனக்கு வந்திருக்காது என்றும் அது தொடர்பாக எந்த வேலையும் எனக்கு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சக பணியாளர்கள் கூட தனக்கு எந்தவித தகவலை அனுப்ப மாட்டார்கள் என்றும் வாரத்துக்கு ஐந்து நாட்களில் இரண்டு மட்டுமே அலுவலகம் சென்றாலும் அந்த இரண்டு நாட்களில் கூட தனக்கு எந்த வேலையும் இல்லாமல் வீடு திரும்பினேன் என்றும் தெரிவித்துள்ளார். அலுவலக நேரத்தில் நான் இரண்டு செய்தித்தாள்களை வாசிப்பேன் என்றும் சாண்ட்விட்ச் சாப்பிட்டுவிட்டு ஒரு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பி விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனது திறமையை நிரூபிக்கும் வகையில் வேலை அளிக்க நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும் ஆனாலும் தனக்கு எந்த விதமான பணியும் இல்லை என்றும் தனது திறமையை நிரூபிக்க நிறுவனம் எந்த ஒரு வேலையும் தனக்கு தரவில்லை என்பதால் வழக்கு தொடர உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த விசித்திரமான வழக்கால் நீதிபதி ஆச்சரியம் அடைந்து உள்ளார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?