Connect with us

உலகம்

ஜெர்மனியில் ஊரடங்கு நீட்டிப்பு: அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு

Published

on

ஜெர்மனியில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அங்கு மேலும் நீட்டிப்பு என அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்புச் செய்துள்ளார்.

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் இரண்டாவது அலை ஏற்பட்டுவிட்டதாகவும் இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து ஒரு சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தற்போது ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்புச் செய்துள்ளார்.

மேலும் இடையில் ஈஸ்டர் விடுமுறையான 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் ஈஸ்டர் விடுமுறையின் போது மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்தே ஈஸ்டர் விடுமுறையின் போது தீவிர ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியை அடுத்து மேலும் சில நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?