வேலைவாய்ப்பு
ஜெர்மனியில் செவிலியர் வேலை: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்துடன் விண்ணப்பிக்கவும்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
ஜெர்மனியில் செவிலியர் பணியிடம்: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேர்வு!
ஜெர்மனியில் செவிலியர் பணியாற்றுவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பவன்குமார். ஜி.கிரியப்பனவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளில் பி1, பி2 நிலை ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்ற, குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் உள்ள 38 வயதிற்குள் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த வேலை வாய்ப்புக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். தகுதியானவர்களிடம் கல்வித் தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படம் உள்ள விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடங்கிய ஆவணங்களுடன், வெள்ளைபின்புலத்தில் எடுத்த புகைப்படத்துடன் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பும் கடைசித் தேதி 5ஆம் தேதி.
மேலும், விவரங்களை அறிய www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 044-22505886/63791 79200 என்ற தொலைபேசி எண்ண்களில் தொடர்பு கொள்ளவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா – அடுத்த இலக்கு எந்த நாடு தெரியுமா?

Happy New Year 2025: உலகின் வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஜெர்மனியில் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி குறைப்பு திட்டம்!

ஜெர்மனியின் ஹாம்பர்க் யெகோவா விட்னஸ் ஹால் துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு!

ஜெர்மனி அதிபர் வருகை எதிரொலி: பெங்களூர் போக்குவரத்தில் திடீர் மாற்றம்..!

இன்னொரு மிகப்பெரிய வேலைநீக்க நடவடிக்கை.. 2600 பேர்களின் வேலை காலி..!













