Connect with us

கிரிக்கெட்

பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா: கேப்டன் மோர்கன் பொறுப்பான ஆட்டம்!

Published

on

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் அவர்களின் பொறுப்பான ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தநிலையில் 124 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. தொடக்க ஆட்டக்காரரான கில் 9 ரன்களிலும் ரானா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன நிலையில் ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் இயான் மோர்கன் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இறுதியில் அந்த அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இயான் மோர்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இன்று யார் வெற்றி பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இடத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?