சினிமா செய்திகள்
சபரிமலை செல்லும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிக்கல்: அதிரடி உத்தரவு
சபரிமலை என்பது புனிதமான ஒரு கோயில் என்பதும் அந்த கோயிலில் ஐயப்பனின் புகழ் தவிர வேறு எதுவுமே இருக்காது என்பதும் அனைவரும் தெரிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் விஜய், ஜித் ரசிகர்கள் அங்கு வாரிசு மற்றும் துணிவு போஸ்டர்களுடன் எடுத்த புகைப்படத்தை இணையதளங்களில் பதிவு செய்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சபரிமலை பக்தர்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சினிமா போஸ்டர்களை கொண்டு வரக்கூடாது என்றும் மேலும் ஐயப்பன் பாடல்கள் தவிர வேறு எந்த இசையும் இசைக் கூடாது என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா பிரமுகர்களின் படங்களை கொண்டு செல்வது வருத்தத்தை அளிக்கிறது என்றும் இதற்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரி மலைக்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் கோவிலின் பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து இனி சபரிமலையில் விஜய் அஜித் படங்களின் புகைப்படங்களுடன் செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.