தமிழ்நாடு
இரண்டு இலையை இரண்டா பிரிச்சு, இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்: கமல் அதிரடி!

தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக, பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலை தனியாக நின்று சந்திக்க உள்ளதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த சூழ்நிலையில் மக்கள் நீதி மைய்யத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவை திருவாரூரில் நடத்தினார் கமல். இதில் கலந்து கொண்டு பேசிய கமல் திமுகவை வாரிசு அரசியல் என மறைமுகமாக சாடினார்.
மேலும் அதிமுகவை அதன் கூட்டணியையும் விட்டுவைக்காமல் விளாசினார் கமல். மக்கள் திலகம் எம்ஜிஆர் போட்ட இலையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எல்லோரும் என்பதை மறந்து விடாதீர்கள். அதுவும் இரண்டு இலையை இரண்டா பிரிச்சு, இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதுவேற இதுவேற. மக்களுக்கு எப்படி குழப்பம் இல்லையோ, அதுபோல எனக்கும் குழப்பம் இல்லை என்றார்.



















