செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கியமான நான்கு ஆவணங்கள் – தமிழக அரசு அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – விண்ணப்பிக்க தேவையான நான்கு முக்கிய ஆவணங்கள்!
தமிழக அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்களுக்கான விண்ணப்பங்கள் தொடங்கி விட்டன. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் கட்டாயமாக நான்கு முக்கிய ஆவணங்களை தயார் வைத்திருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பெண்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை அவசியம் இணைக்க வேண்டும்:
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
வங்கி பாஸ்புக்
மின் கட்டண ரசீது
மேலும், ஆதார் எண் மற்றும் வங்கி பாஸ்புக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் மூலம், அரசு வழங்கும் தொகை ரூ.1000 உங்கள் வங்கி கணக்கில் வரும்போது தொடர்பான தகவல்கள் உடனடியாக உங்கள் மொபைல் எண்ணிற்கு அறிவிக்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாட்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டம் தொடர்பாக வலியுறுத்தியுள்ளதால், தகுதியான பெண்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அரசுத் துறைகள் பரிசீலித்து, 45 நாட்களுக்குள் பதில் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத முதல் வாரம் முதல் விண்ணப்ப நிலை தெரியவரும். ஏதேனும் பிழைகள் இருந்தால், அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அதனை சரி செய்தால் திட்டத்திற்கு தகுதி பெற்றதற்கான வாய்ப்பு உறுதி.
இதன் மூலம், தகுதியும், தேவையான ஆவணங்களும் சரியாக உள்ள பெண்கள் தவறாது இந்த திட்டத்திலிருந்து பயன்பெற முடியும்.



















