Connect with us

இந்தியா

இதுதான் நான் கொடுத்த முழு பேட்டி: ராமர் யார் என்றே தெரியாது என கூறிய ஜோதிமணி எம்பி டுவிட்!

Published

on

ராமர் யார் என்றே தெரியாது என்று கூறிய ஜோதிமணி எம்பி, அந்த பேட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த பேட்டி என்றும், அதனை வைரலாக்கிய தமிழக பாஜகவுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியின் முழுமையான வடிவம் இதுதான் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டி இதோ:

ஜோதிமணி: நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். எனக்கு ராமரைத் தெரியாதுதான். நாங்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள். நாங்கள் எங்கள் மூதாதையாரை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். நீங்கள் தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.

எங்கள் ஊரில் ராமர் கோயில்கள் கிடையாது. நான் வாரா வாரம் வழிபடப் போகும் கோயில் எங்கள் குலசாமி, மூதாதையாருடையது. இதே போல வடகிழக்கு மாநில மக்கள், ஆதி குடிகள், பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாருமே தத்தமது இனத்து வழிபாட்டு முறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்.

நான் ராமாயணம்,மகாபாரதம் எல்லாம் படித்திருக்கிறேன்.ஆனால் ராமரை வழிபடும் வழக்கம் எங்களிடம் இல்லை. தேசிய அரசியலுக்கு வரும் வரை இது குறித்து யோசிக்க வேண்டிய அவசியமே கூட எங்களுக்கு இருக்கவில்லை.

நிருபர்: அதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அடுத்தவர் வழிபடும் ஒரு கடவுளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்க முடியுமா?

ஜோதிமணி: அப்படியெல்லாம் செய்யவில்லை. சொல்லப் போனால் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்று மன்மோகன் சிங் சொல்லவே இல்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: யாருக்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடைக்கவில்லையோ, அவர்கள் முஸ்லிமோ, தலித்தோ, ஆதிகுடியோ அவர்களுக்கு தேச வளங்களில் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் பேசி இருக்கிறார். முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் இதையே வேறு வகையில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்:

என்னிடம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒன்று நன்றாக சாப்பிட்டு செழிப்பாக இருக்கிறது; இன்னொன்று நோஞ்சனாக உள்ளது. நான் என் உணவை நோஞ்சான் பிள்ளைக்குத்தான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொடுப்பேன். அப்போதுதான் இரண்டு பிள்ளைகளும் சமமாக வளரும், என்றார். அதைத்தான் மன்மோகன் சிங் சொன்னார். பெண்களாகிய நாம் ஏன் அரசியல் இட ஒதுக்கீடு கேட்கிறோம்? காரணம் நாம் அதிகாரமின்றி இருக்கிறோம். எனவே நமக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது…

நிருபர்: இப்போது இன்றைய அரசியல் விவாதங்களை பாஜகதான் தீர்மானிக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

தேசிய கீதத்தை பாட மாட்டேன் என்றவர்கள் இப்போது பாடிக் கொண்டிருக்கிறார்கள். வந்தே மாதரம் கோஷமிட மறுத்தவர்கள் இப்போது இடுகிறார்கள்…

ஜோதிமணி: இதையெல்லாம் நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து காங்கிரஸ் கூட்டங்களில் நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம். வந்தே மாதரம் கோஷமித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே எங்கள் காங்கிரஸ் கூட்டங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி தேசிய கீதத்தில்தான் முடியும். இதெல்லாமே பாஜக பரப்பும் ஆதாரமற்ற பொய்கள்தான்.

நிருபர்: கடைசியாக, நீங்கள் இந்து மதத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். இந்துத்துவத்துக்கு எதிராக உள்ளீர்கள்; அவ்வளவுதானே?

ஜோதிமணி: நான் உண்மையான இந்து எனில் நான் இந்துத்துவத்துக்கு எதிராகத்தான் இருக்க வேண்டும். காரணம், அவர்கள் இந்து மதத்தை தவறாக பிம்பப்படுத்துகிறார்கள். இந்து மதத்துக்கு கெட்ட பெயர் வாங்கித் தர முயல்கிறார்கள். எனவே ஒவ்வொரு இந்துவின் கடமையும் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் முன்னெடுக்கும் இந்துத்துவத்தை எதிர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

நிருபர்: நன்றி

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cưng chiều cô vợ quân nhân vibetruyen. elbilar en nostalgisk .. Mặc dù mảnh đất này không nấm ở trung tâm hoa hạ, nhưng lại nấm ở vị trí trọng yếu của thành phố bắc lang, một khi bọn họ lấy được, cũng giống như việc trái tim của thành phố bắc lang bị chọc một gậy.