சினிமா செய்திகள்
இறைவனை மீறி எதுவும்நடக்காது,விதிப்படி தான் நடக்கும்? டிஆர் கண்ணீர் பேட்டி

இறைவனை மீறி எதுவும் நடக்காது என்றும் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றும் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னர் டி ராஜேந்தர் உருக்கமான பேட்டி அளித்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இயக்குனர் டி ராஜேந்தர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்ல இருப்பதாகவும் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள சிம்பு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு அமெரிக்கா செல்லும் டி ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நான் எதையும் மறைத்தது கிடையாது என்றும் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன் என்றும் தெரிவித்தார்.
எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் ஆனால் அதே நேரத்தில் என்னதான் பிரார்த்தனை செய்தாலும் விதி என்று ஒன்று இருக்கிறது என்றும் அந்த விதியை தாண்டி எதுவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
எனது மகன் சிலம்பரசனுக்காகத்தான் நான் அமெரிக்கா சொல்கிறேன் என்றும் அவர் கண்ணீருடன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.