Connect with us

கிரிக்கெட்

இந்தியா அபார பந்துவீச்சு… ஆஸ்திரேலியா 197 ரன்னில் சுருண்டது: மீண்டது இந்தியா?

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில் நேற்று 109 ரன்னில் சுருண்ட இந்திய அணி இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை 197 ரன்களில் சுருட்டியுள்ளது.

#image_title

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 22, ஷுப்மன் கில் 21 ரன்களை எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் 41 ரன்கள் மேற்கொண்டு சேர்பதற்குள் இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. இந்த இன்னிங்சில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியம்54 mins ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு2 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு3 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்4 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா6 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்18 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா18 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868