தமிழ்நாடு
ஜெயலலிதா வரி வழக்கில் சிக்கிய தீபா, தீபக்: வாரிசு உறுதியானதால் சிக்கல்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் என முடிவு செய்யப்பட்டதை அடுத்து தற்போது ஜெயலலிதாவின் வழக்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றும் ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள் தான் என்றும் தீபா மற்றும் தீபக் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை மீட்டனர் .
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்வ வரி வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரையும் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிட்டதாகவும் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை இருவருக்கும் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்றும் செய்திகள் வெளியானது .
ஜெயலலிதாவின் சொத்துக்களை பெறுவதற்கு வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்றால் ஜெயலலிதாவின் வழக்குகளுக்கும் அந்த வாரிசுகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.