வணிகம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: 4 மாத நிலுவை அகவிலைப்படி இம்மாத ஊதியத்துடன்!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 மாத நிலுவை அகவிலைப்படி வழங்க அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2025 ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட்ட 2% அகவிலைப்படி (DA) நிலுவை தொகை இந்த மாத ஊதியத்துடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28, 2025 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, அகவிலைப்படி 53%லிருந்து 55% ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகின்றனர்.
இந்த உயர்வுக்காக மாநில அரசு ஆண்டுக்கு ₹1,252 கோடி கூடுதல் நிதியை செலவிட உள்ளது. இது தொடர்பான அரசாணை தமிழக முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
நிலுவை தொகை தற்போது வரை பெறாத நான்கு மாதங்களுக்கான தொகையாக வழங்கப்படும். ஊழியர்களுக்கு ஊதியத்துடன், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்துடனும் இத்தொகை சேர்க்கப்படும்.















