இந்தியா
இன்று முதல் 81 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்!
மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் கீழ் இன்று முதல் 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்த திட்டத்தின் கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள் மற்றும் முன்னுரிமை குடும்பங்கள் (PHH) அரிசி அட்டை வைத்துள்ளவர்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
முன்னுரிமை குடும்பங்களுக்கு (PHH) 5 கிலோவும், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.