Connect with us

இந்தியா

1 லட்சம் பேருக்கு வேலை.. இந்தியர்களின் வயிற்றில் பால் வார்த்த ஃபாக்ஸ்கான் ..!

Published

on

இந்தியாவில் ஒரு லட்சம் பெயர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஃபாக்ஸ்கான் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வேலை நீக்க நடவடிக்கையும் அதிகரித்து வருவதால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் போன் உற்பத்தி தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக இந்நிறுவனம் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய மின்னணு தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இணை இயக்குனர் சந்திரசேகர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது என்பதை தெரிந்ததே. ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான் என்றும் தைவானை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தொழிற்சாலைகள் வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து ஃபாக்ஸ்கான் தலைவர் ஒரு குழுவை பெங்களூருக்கு அனுப்பி உள்ளார். இந்த குழு கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரை சந்தித்து பேசி உள்ளதாகவும் இந்தியாவில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைத்தால் அதற்கு கர்நாடக மாநில அரசு முழு ஒத்துழைப்பு தரும் என கர்நாடக மாநில தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பெங்களூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்தால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார். இது பெங்களூருக்கு மட்டும் இன்றி நாட்டில் உள்ள அனைவரது வேலை வாய்ப்புகளை பெருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையில் ல் வல்லுனர்களாக இருக்கும் பலரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விரைவில் வேலைக்கு சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்15 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா17 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!