அழகு குறிப்பு
குளிர்காலத்தில் சருமத்தை காக்க.. முகம் பளபளக்க.. சூப்பர் டிப்ஸ்!
ஆப்பிள் பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும். தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், வறண்ட சருமம் புதுப்பொலிவடையும். பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.
வேப்பிலை, புதினா, சிறுது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காய வைத்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்கரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும்.
தக்காளி மற்றும் தயிர் இரண்டையும் நன்றாக அரைத்து முகத்தில் பேக் ஆக செய்து போட்டு கொள்ளவும். சிறிது நேரம் மசாஜ் செய்து, பின், இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும்.
இது சருமத்தில் உள்ள தழும்புகள் மறைத்து சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மை மற்று தயிரில் உள்ள லாட்டிக் அமிலம் சருமத்திற்கு நன்மை தரும்.
குளிர்காலத்தில் சருமத்தை காக்க..
வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம் குளிக்கலாம். உடனடியாக மாய்ச்சுரைசர் பூசுவது சரும வெடிப்பை தவிர்க்கும். நீர்ச்சத்தை பராமரிக்க அதிக நீர், பழச்சாறுகள் அருந்தலாம். முகச்சருமம் போலவே கை, கால் சருமத்துக்கும் பராமரிப்பு அவசியம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், அன்னாசி போன்ற விட்டமின் -சி நிறைந்த உண்வுகளை அதிகம் எடுக்கலாம். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கவும். துரித உணவுகள், நொறுக்கு தீனி, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.
முகம் பளபளக்க..
சிறிதளவு பால், கால் ஸ்பூன் எலுமிச்சைசாறு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல், சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஸ் செய்து கழுவவும்.