இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.03.2026

- ஏப்ரல் 20 முதல் உள்நாட்டு விமானங்களில் 60 சதவீத இருக்கைகளை கூடுதல் கட்டணமின்றி பயணிகளுக்குஒதுக்க உத்தரவு.
- இன்றைய தங்கம் வலை – கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.13670க்கும் சவரன் ரூ.109360க்கும் விற்பனை ஆகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் மட்டும் இன்று நள்ளிரவ (மார்ச் 31 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டணம் உயரும்.
- சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எந்தப் புகாரும் இல்லாமலேயே தாமாக முன்வந்த ஆய்வ செய்து நீக்க உத்தரவிடும் வகையில் புதிய திருத்தங்களை முன்மொழிந்தது ஒன்றிய அரசு. இந்த விதிமுறை செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்களுக்கும் செய்திகளை பகிரும் சாதாரண தனிநபர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரானிலிருந்து மருத்துவ உதவிகள் பெற இந்தியா வரவிருந்த இந்திய விமானத்தை வான்வழித்தாக்குதல் மூலம் அமெரிக்கா தாக்கியுள்ளது.
- சாத்தான்குளம் தந்தை மகள் கொலை வழக்கில் தண்டனை விவரங்கள் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும்.
- வட சென்னை அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் பயங்கர தீ விபத்து. 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம். முழுமையாக தீயை கட்டுப்படுத்த 2நாட்கள் ஆகலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தகவல்
- அணைத்து கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும். பரப்புரையில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை அணைவருக்கும் சமமாக அமல்படுத்த வேண்டும். – தமிழ்நாடு டிஜிபிக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம்.
- தனியார் பள்ளிகளில் 2026-27 ம் ஆண்டுக்கான 25% ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு. பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள குழந்தைகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தகவல்.



