வணிகம்
EPFO புதிய ஓய்வூதிய விதி 2025: ஒரு மாதம் வேலை செய்தாலும் இப்போது ஓய்வூதியம் பெற உரிமை!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) 2025-ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய விதிகளில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, ஒரு மாதம் மட்டும் வேலை செய்து EPS (Employees’ Pension Scheme) கணக்கில் பங்களிப்பு செய்திருந்தாலும், அந்த ஊழியருக்கு ஓய்வூதியம் பெறும் உரிமை உண்டு.
இந்த மாற்றம் குறிப்பாக BPO, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பெரும் நிவாரணமாகும். ஏனெனில், இத்துறைகளில் குறுகிய காலத்தில் வேலையை விட்டு விலகுவது மிகவும் சாதாரணமானதாக உள்ளது.
முன்பு, குறைந்த காலம் பணிபுரிந்தவர்கள் EPS பங்களிப்பை திரும்பப் பெற முடியாமல், அவர்களின் பங்களிப்பு வீணாகிப் போய்விடும். ஆனால் இப்போது EPFO-வின் இந்த புதிய மாற்றம் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது.
👉 உதாரணமாக, ஒருவர் ஒரு மாதம் மட்டுமே வேலை செய்து விட்டு விலகினாலும், அவரின் PF தொகையைப் பெறுவதோடு, EPS பங்களிப்பு அவருக்கு ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும்.
🛑 PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியது:
ஆறு மாதங்களுக்குள் வேலையை விட்டு விலகியிருந்தால், உங்கள் PF பாஸ்புக்கில் EPS பங்களிப்பை சரிபார்க்கவும்.
EPS பங்களிப்பு சேர்க்கப்படவில்லை என்றால், 2024-இன் புதிய சுற்றறிக்கையை குறிப்பிட்டு EPFO-விடம் புகார் செய்யவும்.
புகார் செய்யும்போது பாஸ்புக் ஸ்கிரீன்ஷாட் அல்லது PDF-ஐ வைத்திருக்க வேண்டும்.
இந்த மாற்றம் குறுகிய கால ஊழியர்களுக்கு மிகப்பெரும் பலனாக இருக்கும், ஏனெனில் இனி அவர்களின் EPS பங்களிப்பு வீணாகாது, எதிர்காலத்தில் ஓய்வூதியமாக கிடைக்கும்.






















