உலகம்
துருக்கி பூகம்பத்தை முன்கூட்டியே கண்டுபிடித்த பறவைகள்: வைரல் வீடியோக்கள்

துருக்கியில் நேற்று நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தை பறவைகள் முன்கூட்டியே கண்டுபிடித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
துருக்கியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் மற்றும் நேற்று மாலை நிகழ்ந்த 7.5 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஆகிய இரண்டு பூகம்பங்கள் அந்நாட்டையே சிதிலப்படுத்தியுள்ளது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கட்டிடங்கள் இடிந்த இடிபாடுகள் தான் காணப்படுவதாகவும் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க புவி ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்பின்படி இந்த பூகம்பத்தில் பத்தாயிரம் பேர் வரை பலியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது கிட்டத்தட்ட உண்மையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகளின் உதவவியோடு துருக்கி அரசாங்கம் மீட்பு பணிகளை விரைவாக நடத்தி வருகிறது என்பதும் இடுப்பாடுகளுக்கு இடையே உயிரோடு இருப்பவர்களை காப்பாற்றும் நோக்கில் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் முதல் நாடாக இந்தியா துருக்கி நாட்டிற்கு மருத்துவ குழுக்களை அனுப்பி உள்ளது என்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளையும் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் தற்போது இக்கட்டான நேரத்தில் இருக்கும் நிலையில் உலக நாடுகள் கை கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியா பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறு வெளியாகி உள்ள வீடியோக்களில் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
துருக்கியில் பூகம்பம் ஏற்படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒரு வித்தியாசமான சத்தத்தோடு ஒரு பதட்டமான நிலையோடு பறந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவை முன்கூட்டியே பூகம்பத்தை அறிந்து கொள்ளும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கும் நிலையில் அதை நிரூபிப்பது போல் இந்த வீடியோ உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பூமியின் காந்த புலத்தை பறவைகளால் உணர முடியும் என்றும் பூமி கீழே நகரும்போது புவி காந்த மாற்றங்களை பறவைகள் உணர்ந்து கொள்ளும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் அது உண்மைதானா என்று எண்ண வைக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பறவைகள் ஒருவித வித்தியாசமான சத்தத்தோடும் பதட்டத்தோடும் இருந்த ஒரு சில நிமிடங்களில் பூகம்பம் நிகழ்ந்தது என்பது நிச்சயமாக தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் பறவைகள் பூகம்பத்தை முன்கூட்டியே உணர்ந்துதான் அந்த பதட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
In Turkey, strange behavior was observed in birds just before the earthquake.????
Follow @CBKNEWS121 #Turkey #TurkeyEarthquake #Turkish #Patriots #America pic.twitter.com/Hsso0NYrLQ
— CBKNEWS (@CBKNEWS121) February 6, 2023












