தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஒரே ஒரு மேயர் பதவி: மற்ற கட்சிகளுக்கு நெஞ்சில் மட்டும் இடம்!
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு மேயர் பதவி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகர்ப்புறத் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளின்படி கிட்டதட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் ஏராளமான பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் கும்பகோணம், சேலம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மேயர் பதவி கேட்ட நிலையில் ஒரே ஒரு மேயர் பதவி மட்டும் தர அதிமுக தலைமை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது .
ஆனால் அதே நேரத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆகிய கட்சிகளும் மேயர் பதவி கேட்டு கொண்டிருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு மேயர் பதவியை தர திமுக தலைமை மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.