தமிழ்நாடு
அண்ணாமலை எச்சரிக்கை எதிரொலி: பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு முதல்வர் அனுமதி!
தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்காவிட்டால் நானே அந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தும் என்றும் பல்லக்கை நானே தூக்குவேன் என்றும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் பட்டினபிரவே நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை பல்வேறு ஆதீனங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதினம் பேட்டி அளித்துள்ளார்.
இதனை அடுத்து வழக்கம்போல் எந்தவித பிரச்சனையுமின்றி பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரதேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து இருந்தது என்பதும் ஆனால் இந்த தடையை மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவோம் என அண்ணாமலை, ஹெச் ராஜா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் எச்சரிக்கை விடுத்தனர் என்பதும் தெரிந்ததே.
மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சமீபத்தில் தருமபுரம் ஆதீன மடத்திற்கு வந்து சென்ற பின்னர்தான் மயிலாடுதுறை நிர்வாகம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.