Connect with us

தமிழ்நாடு

அம்மா, அப்பா இல்லாத சிறுமிகளை சீரழித்த காமுகன்!

Published

on

மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 25-கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த நிர்வாகியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர்கள் சிலர் காப்பகத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்குள்ள ஆதரவற்ற சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

காப்பகத்தை நடத்தி வந்தவர்களில் ஒருவரான ஆதிகேசவன், சிறுமிகளை தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை வேறு காப்பகத்துக்கு அனுப்பிய அதிகாரிகள் மற்ற சிறுவர்களையும் வேறு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைத்த போலீசார் ஆதிகேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மற்றொரு நிர்வாகியான ஞானப்பிரகாசத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?