செய்திகள்
திருச்சி இதயக் கோளாறுடன் பிறந்த குழந்தையை 4மணி நேரத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்ற ஆம்புலன்ஸ்!
திருச்சி தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இதயக் கோளாறுடன் இருந்தது. இந்தக் குழந்தையைச் சிகிச்சைக்காகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 350 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆங்காங்கே 15 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி, வாட்ஸ் – அப் குழு மூலம் போக்குவரத்தை சரி செய்து, இளைஞர் குழு அசத்தி உள்ளது.