Connect with us

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிர்ச்சி கருத்து!

Published

on

அரசுத் தேர்வில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோர உரிமை இல்லை என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி தரக்கூடிய உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் போது அவர்களுக்கு தகுதி தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் அதில் தேர்ச்சி பெற்றவர்களே ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அண்மையில் சட்டம் கொண்டுவரப்பட்டது .

அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் பயிற்றுவிக்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டது .

இந்த நிலையில் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தை நாடிய நிலையில் அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஊதிய உயர்வு கேட்க உரிமை இல்லை என்றும், ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?