Connect with us

தமிழ்நாடு

செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு: 2015 போல் வெள்ளம் வருமா?

Published

on

செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2015 போல் வெள்ளம் வருமா? என்ற அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் சென்னையில் கனமழை பெய்து வருவதால் நிரம்பி உள்ள நீர் நிலைகளில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது என பொதுப்பணித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என்றும் இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென முன்னறிவிப்பின்றி உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஒரு நிலைமை ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் 2021 ஆம் ஆண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலிபணியிடங்கள் 2553!

செய்திகள்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை குறைவு (05/06/2024)!

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!