ஆரோக்கியம்
Importance of drinking water: கோடையில் நாம் ஏன் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்?
தண்ணீர், நம் வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. நமது உடல் சிறப்பாக செயல்பட, நாம் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். நம் உடலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. வெயில் காலத்தில் வியர்வையால், நிறைய தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் குறைந்துவிடும் என்பதால், நாம் தண்ணீர் உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது. ஒருவருக்கு போதுமான நீர்ச்சத்து இல்லாதபோது, அவர் சோர்வை உணர்வலாம். குறைந்த ஆற்றல் நிலைகள் காரணமாக, தொடர்ந்து நகர்வதற்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வது கடினமாக இருக்கலாம். இது மேலும் பிற உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எடை அதிகரிப்பு மற்றும் மோசமான செரிமானம் ஆகியவை போதுமான தண்ணீர் உட்கொள்ளாததால் ஏற்படும் பிரச்சனைகள். கோடைக் காலத்தில், உடல் குளிர்ச்சியடைய முயலும் போது, வியர்வை மூலம் நீர் வெளியேறுவதால், நம் உடலில் உள்ள நீரின் அளவைத் தக்க வைத்துக் கொள்ள நாம் அதிக தண்ணீர் குடிக்கிறோம். நமது உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது என்பதை அறிந்தும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், வெப்பம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.
கோடையில் அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
- வாய் வறட்சியைத் தடுக்கிறது
வறண்ட வாயாலும் கோடை வெப்பத்தாலும் தாகத்தின் தேவையை பாதிக்கிறது. போதுமான நீரேற்றம் தொண்டை, உதடுகள் மற்றும் வாயை, குறிப்பாக தூங்கும் போது ஈரமாக வைக்கும். சரியான நீரேற்றம் உணவை உண்ணுதலலை எளிதாக்குகிறது. நமது உமிழ்நீர் தண்ணீரைக் கொண்டுள்ளது. மேலும் உணவை உடைக்க உதவுவதற்கு திரவங்கள் தேவைப்படுகின்றன. நீண்ட கால வறண்ட வாய், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
ஊட்டச்சத்துக்கள் குடல் வழியாக செல்ல திரவம் அவசியம். திரவத்தின் பற்றாக்குறை மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது, இது நீண்ட காலத்திற்கு கூடுதல் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் மூலம் உடல் கழிவுகளை அகற்ற தண்ணீர் உதவுகிறது. ஆரோக்கியமான செரிமானத்திற்கு, சாப்பிடுவதற்கு 30நிமிடங்களுக்கு முன் அல்லது பின் தண்ணீர் குடிக்கவும்.