இந்தியா
பாஜக ஆட்சிக்கு ஆங்கிலேயர் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை: காந்தியின் செயலாளர்!

தற்போது பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சிக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியே பரவாயில்லை என்று காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியத்தில் கண்காட்சியைச் சுதந்திர போராட்ட வீரரும் காந்தியின் தனிச் செயலாளராகவும் இருந்த கல்யாணம் நேற்று திறந்துவைத்தார்.
அதன் பின்னர் அங்கிருந்தவர்களுடன் காந்தியுடனான தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்ட கல்யாணம், காந்தி விரும்பிய நிர்வாகத்தை தர தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் வேதனைப்பட்டார்.
ஆங்கிலேய ஆட்சியில் ஊழல்கள் கிடையாது. காந்தியே அவர்களின் நிர்வாகம் சிறப்பாக உள்ளதாக பலமுறை கூறியுள்ளார். தற்போதைய ஆட்சியை விட ஆங்கிலேய ஆட்சியையே விரும்புகிறேன் என கல்யாணம் குறிப்பிட்டார்.





















