கிரிக்கெட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திடீரென எதிர்க்கும் தமிழ் அமைப்புகள்: என்ன காரணம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திடீரென தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்றும் நேற்று முன்தினமும் நடந்த நிலையில் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையை சேர்ந்த மஹிஷ் தீக்சானா என்பவரை 70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட மஹிஷ் தீக்சானா இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே போர் நடந்தபோது அவர் இலங்கை ராணுவத்தில் இருந்து தமிழர்களை சுட்டுக் கொன்றார் என்றும் தமிழ் அமைப்புகளில் உள்ள சிலர் கூறி வருகின்றனர்.
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர் மஹிஷ் தீக்சானா ஏலம் எடுக்க கூடாது என்றும் அவரை அணியில் வைத்திருந்தால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகிவருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.