Connect with us

உலகம்

கிங்கான் உடன் காதல்: பெண்ணுக்கு அனுமதி மறுப்பு!

Published

on

கிங்காங் என்ற மனித குரங்கு உடன் காதல் வயப்பட்ட பெண்ணுக்கு வனவிலங்கு பூங்காவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள வனவிலங்கு பூங்காவுக்கு அடிய் திம்மெர்மன்ஸ் என்ற பெண் அடிக்கடி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த பூங்காவில் உள்ள 38 வயதான கிங்காங் என்ற மனித குரங்கு உடன் அடிய் திம்மெர்மன்ஸ் அடிக்கடி பழகியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் அந்த கிங்காங் உடன் அடிய் திம்மெர்மன்ஸ் காதல் வயப்பட்டதால் தெரிகிறது. தினசரி வனவிலங்கு பூங்காவில் கிங்காங் உடன் அதிக நேரம் அடிய் திம்மெர்மன்ஸ் செலவு செய்துள்ளார். இருவரும் அதிக நேரங்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஒருகட்டத்தில் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது.

இதனை பார்த்த பூங்கா நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து அடிய் திம்மெர்மன்ஸ் இனிமேல் வனவிலங்கு பூங்காவுக்கு வரக்கூடாது என்று எச்சரித்தது. சிட்டாங் என்ற அந்த மனிதகுரங்கு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் மற்ற மனித குரங்குகளுடன் பழகாமல் தனியாக இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அடிய் திம்மெர்மன்ஸ் கூறியபோது ’நான் அந்த மனித குரங்கை உண்மையாகவே காதலிக்கிறேன். அவனும் என்னை காதலிக்கிறான். எங்களிருவரையும் ஏன் பூங்கா நிர்வாகிகள் பிரிக்கின்றனர் என்று தெரியவில்லை. எங்களது உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகள் கூறியபோது ’அந்த பெண்ணுடன் ஏற்பட்ட காதலுக்கு பின்னர் அந்த மனித குரங்கு மனிதர்களை மட்டுமே கவனிக்க தொடங்கியுள்ளது. சக மனித குரங்குகளை கவனிப்பதில்லை. மனித குரங்குகள் மனித குரங்குகளுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதனால்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று கூறியுள்ளனர்.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?