Connect with us

கிரிக்கெட்

தோனிக்கு இனிமேல் இந்திய அணியில் இடமில்லை: பிசிசிஐ நிர்வாகி பரபரப்பு பேட்டி!

Published

on

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப்போவதாகவும், அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சும் அதிகமாக உலா வருகிறது.

தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சுக்கள் வந்தாலும், அவர் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அவரை பிசிசிஐ ஓரம்கட்ட உள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேட்டியளித்துள்ளார். பெயர் சொல்லாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு இந்த சர்ச்சைக்குறிய பேட்டியை அளித்துள்ளார்.

அதில், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னமும் முடிவு பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது. முன்பு போல தோனியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை என்பதை உலகக் கோப்பை போட்டியிலேயே பார்த்தோம். 6-ஆம் நிலை, 7-ஆம் நிலை வீரராகக் களமிறங்கியும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இது அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கிறது. வர உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான போட்டியிலும் தோனி தேர்வாக வாய்ப்பில்லை.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவரைச் சேர்க்கும் திட்டம் இந்திய அணிக்கு இல்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கெளரவமாக தோனி விடைபெற வேண்டும். இனிமேல் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. அதனால் ஓய்வு பெறுவது குறித்து தோனி அறிவிக்க வேண்டும் என அந்த பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார். இது தோனியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?