Connect with us

உலகம்

இலங்கை அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா: பரபரப்பு தகவல்!

Published

on

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதன்பின் அவர் ராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இலங்கையில் மக்கள் போராட்டம் காரணமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது என்பதும், சமூக வலைத் தளங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடர்ந்து பொது மக்களின் போராட்டம் நீடித்து வருவதை அடுத்து இன்று இலங்கையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி விட்டது. குறிப்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான மஹிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார்.

இலங்கையில் 26 அமைச்சர்களும் அதிரடியாக ராஜினாமா செய்தாலும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 26 அமைச்சர்கள் இலங்கை அதிபரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இலங்கை அமைச்சர்கள் ஒட்டுமொத்த ராஜினாமாவை அடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நெருக்கடியை பிரதமர் மற்றும் ஜனாதிபதி எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?