தொழில்நுட்பம்
ஏர்டெல்: 5ஜிபி இலவச டேட்டா.! 100% கேஷ் பேக் ரீசார்ஜ்.!

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அட்டகாசமான சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி டேட்டா சேவையை இலவசமாக வழங்கவுள்ளது. உங்களின் ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாவதற்கு முன் ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்துவிட்டால், கூடுதல் 5ஜிபி, 4ஜி டேட்டா வழங்கப்படுமென்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது
இந்த ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் ரோமிங் சேவை, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்லிங் சேவை, நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் கள் என 28 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
கூடுதல் டேட்டா சேவை ரூ.199 ரீசார்ஜ் திட்டத்திற்கும் பொருந்துமென்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் கூடுதலாக 100% கேஷ் பேக் சலுகையையும் ரூ.199 திட்டத்துடன் வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் 100% கேஷ் பேக் சலுகை 2 வருட வேலிடிட்டியுடன் வரும் கூப்பனாக வழங்கப்படுமென்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் இன் 100% கேஷ் பேக் சலுகை, ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தை “மை ஏர்டெல் ஆப்”(My Airtel app) மூலம் ரீசார்ஜ் செய்யும்பொழுது மட்டுமே வழங்கப்படும் என்ற நிபந்தனையும் ஏர்டெல் நிறுவனம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












