தமிழ்நாடு
முதல்வரிடம் மனம்திறந்து மன்னிப்பு கோருகிறேன்: ஆ ராசா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து திமுக எம்பி ஆர் ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்ணீருடன் எனது தாயார் குறித்து ஆ ராசா இப்படி பேசி விட்டாரே என்று கண்கலங்கி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்வரிடம் தான் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஆ ராசா தெரிவித்துள்ளார். எனது பேச்சால் முதல்வர் பழனிசாமி கலங்கினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பேச்சுக்காக எனது அடிமனத்தின் ஆழத்திலிருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி மனதளவில் காயம்பட்டு இருப்பாரேயானால் என்னுடைய மனம் திறந்த மன்னிப்பு கோருவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


















