இந்தியா
அதானி குழுமத்துக்கு மேலும் ஒரு சிக்கல்.. ஹிண்டர்பர்க்கை அடுத்து ஃபோர்ப்ஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டு.,.!

கடந்த சில நாட்களுக்கு முன் அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் என்ற நிறுவனம் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனத்தை அடுத்து ஃபொநிறுவனம் கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த முறை ஃபோர்ப்ஸ் நிறுவனம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி மீது குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி என்பவர் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் மூலம் ரஷ்ய வங்கியில் முறைகேடாக கடன் பெற்றிருப்பதாக ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழுமங்களின் வெளிநாட்டு நிறுவனங்களை வினோத் அதானி கவனித்து வருகிறார் என்றும் இவர் சிங்கப்பூரை சேர்ந்த பினாக்கிள் என்ற வணிக நிறுவனத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த வங்கி ஒன்றிடம் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ரஷ்யா வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு உத்தரவாதமாக ஆக்ரோ ஏசியா மற்றும் வேர்ல்ட் வைட் ஆகிய நிறுவனங்களை பினாக்கிள் குறிப்பிட்டுள்ளது என்றும் இந்த நிறுவனங்களும் அதானி குழும பங்குதாரருக்கு சொந்தமானது என்றும் ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது அதானி நிறுவனங்களின் பங்குகளையே உத்தரவாதமாக வைத்து வாங்கிய கடனை அதானி நிறுவனத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது என்பதுதான் என்ற குற்றச்சாட்டின் மையக்கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதானி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்த நிலையில் தற்போது ஃபோர்ப்ஸ் நிறுவனம் கிளப்பிய குற்றச்சாட்டால் அதானிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதானி நிறுவனங்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதற்கு அதானி குழுமம் என்ன விளக்கம் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




















